கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Summer Leave No Special Classes
Summer Leave No Special Classes: தமிழகத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இந்த நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் பதினோராம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக தமிழக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளதை தொடர்ந்து தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கையானது விடுத்துள்ளது.

கோடை விடுமுறையை மாணவர்கள் பாதுகாப்பாக கடிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் பள்ளி கல்வித்துறை வழங்கி உள்ளது விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இரண்டாம் தேதி திறக்கப்பட உள்ளன இதனிடையே சென்னை நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள் அடுத்த ஆண்டில் பொதுத்தேர்வு எழுதமுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.
சில பள்ளிகள் வினைய வழக்கில் வகுப்புகள் நடத்துவதாகவும் கல்வித்துறைக்கு புகார்கள் கிடைக்கப்பட்டுள்ளன தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதுடன் தொடர்புக்கு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என பெற்றோர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன இந்த நிலையில் கோடை விடுமுறைகள் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதில் அனைத்து விதமான தனியார் பள்ளிகளும் ரூம் ஒன்றாம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விடுமுறை நாள்களில் எந்த பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை மூலம் அந்தந்த பள்ளி முதல்வர்கள் தாளாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை மீறி வகுப்புகள் நடத்தி மாணவர்கள் பாதிக்கப்பட்டால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளி இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலமாகவும் அறிவுறுத்தலானது வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.