India tamil news leave of government employees cancelled holiday for educational institutions
அரசு வேலை செய்பவர்களின் ‛லீவ்’ ரத்து; கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
புதுடில்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், பல மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. மேலும் அரசு வேலை செய்பவர்களின் விடுமுறை ரத்து, மின்தடை உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பஞ்சாப்:
* பாகிஸ்தானுடன் 532 கி.மீ., எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
* ஆறு எல்லை மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
* அனைத்து போலீசாரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ராஜஸ்தான்:
* பாகிஸ்தானுடன் 1,070 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
* சர்வதேச எல்லைக்கு அருகில், நிர்வாக மற்றும் காவல்துறை ஊழியர்களுக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
* ஐந்து எல்லை மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.