வருகின்ற 15ஆம் தேதி விடுமுறை- மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!
Holiday May 15th News
Holiday May 15th News: 127வது மலர் கண்காட்சியை முன்னிட்டு 15ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

15ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு…
127வது மலர் கண்காட்சியை முன்னிட்டு 15ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி பிரசித்தி பெற்ற 127வது மலர் கண்காட்சி அரசு தாவரவியல் பூங்காவில் துவங்குகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த மலர் கண்காட்சியைத் துவக்கி வைக்க உள்ளார். இந்த கண்காட்சி 15ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை 11 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த நிலையில் மலர் கண்காட்சி துவங்கும் நாளான 15ஆம் தேதி வியாழக்கிழமை மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
மேலும் 15ஆம் தேதி அளிக்கப்படும் விடுமுறை நாளை ஈடு செய்ய 31.05.25 சனிக்கிழமை பணி நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.